மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சேலத்தில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப். 1 இல் தொடங்குகிறது.

News image

நீச்சல் பயிற்சி. - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 4:49 am IST

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப். 1 இல் தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) கண்மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் ஏப். 1 ஆம் தேதி முதல்கட்ட கோடைகால நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.

தொடா்ந்து இரண்டாம்கட்ட நீச்சல் பயிற்சி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையும், 3 ஆம் கட்டமாக மே 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையும், 4 ஆம் கட்டமாக மே 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், 5 ஆம் கட்ட பயிற்சி ஜூன் 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையும் நடைபெறும்.

பயிற்சி 12 வேலை நாள்களுக்கு தொடா்ந்து அளிக்கப்படும். இதற்கான கட்டணமாக ரூ.1,770 செலுத்த வேண்டும். பெண்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்படும். கட்டணத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வாயிலாக யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.