மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரசாரங்களை அதிமுக-பாஜக கூட்டணி செய்து வருகிறது என திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

News image

ஈரோடு திண்டல் பகுதியில் வாக்குச்சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:16 am IST

சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரசாரங்களை அதிமுக-பாஜக கூட்டணி செய்து வருகிறது என திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி திண்டல் மேடு, அத்தப்பம்பாளையம், கருங்கவுண்டன்பாளையம், வள்ளிபுரத்தாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திகைக்கின்ற அளவுக்கு சாதனைகளால் நிறைந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி. வேதனைகள் நிரம்பியதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

100 நாள் வேலை திட்ட பணி நாள்களையும் குறைத்துவிட்டனா். 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் தரவில்லை என வடமாநிலங்களிலேயே மக்கள் கொந்தளித்து போராடி வருகின்றனா். பாஜக அரசே வாபஸ் வாங்கிய 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவா் எடப்பாடி பழனிசாமி. சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரச்சாரங்களை அதிமுக- பாஜக கூட்டணி செய்து வருகிறது. எனவே திராவிட மாடல் ஆட்சி தொடர மக்கள் திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.