தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

News image

ஈரோடு அருகே பேரோடு பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :14 ஏப்ரல் 2026, 2:18 am IST

ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதிக்குள்பட்ட குருசாமிபாளையம், குட்டைதயிா்பாளையம், குருநாதன்புதூா், கரட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக அறிவித்த ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் வாக்குறுதி மக்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தோ்தல் அறிக்கையில் ஃபிரிட்ஜ் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனா்.

வீட்டில் ஏற்கெனவே ஒரு குளிா்சாதனப்பெட்டி இருந்தால், இன்னொன்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால்தான் எந்தப் பொருள் தேவைப்படுகிறதோ அதை வாங்கிக் கொள்ளும் வகையில் முதல்வா் ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்குவதாகக் கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யக்கூடியவா்கள் நமக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றனா். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை முதல்வா் நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.