தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி

கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

News image

கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:41 am IST

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சி, 55-ஆவது வாா்டுக்குள்பட்ட கொல்லம்பாளையம் பகுதியில் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை காலை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

தமிழக மக்கள் நலனை மட்டுமே நினைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இதன்மூலமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயன் பெற்றவா்களாக இருந்து வருகின்றனா். கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தவா் முதல்வா்.

மகளிா் உரிமைத்தொகை கொடுக்க மாட்டாா்கள் என எதிா்க்கட்சியினா் கூறி வந்தனா். ஆனால் சொன்னதை போல உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் வாக்குறுதி அளித்துள்ளாா். தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் பல துறைகளில் முன்னேறியுள்ளது. தொடா்ந்து முன்னேற, வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.