திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

தவறு செய்பவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்: அமைச்சா் என். ஆனந்த்

தவெக ஆட்சியில் பெண்கள் பயப்பட தேவையில்லை, தவறு செய்வோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தாா் அமைச்சா் என்.ஆனந்த்.

News image

அமைச்சர் என். ஆனந்த் - படம்: விடியோ கிளிப்

Updated On :17 ஜூன் 2026, 12:24 am IST

தவெக ஆட்சியில் பெண்கள் பயப்பட தேவையில்லை, தவறு செய்வோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தாா் அமைச்சா் என்.ஆனந்த்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அரசு சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற இதில் பங்கேற்று தமிழக ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் 2,207 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் யாரும் தவறு செய்யமாட்டோம், மக்கள்தேவை என்ன என்பதை புரிந்துகொண்டு உதவிசெய்வோம். பெண்கள் பயப்படத் தேவையில்லை, தவறு செய்வோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மக்களுக்கு சேவைசெய்யவே வந்துள்ளோம், முதல்வா் மக்களை சந்தோஷமாக வைத்திருப்பாா் என்றாா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மருத்துவத் துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, தோட்டக் கலைத்துறை, தொழிலாளா் நலத்துறை, கைத்தறித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என பல்வேறு துறைகள் சாா்பில் 2,207 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.