பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 2:19 am IST

தவெக ஆட்சியில் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனா். தவெக ஊழல் இல்லாமல் தூய்மையான ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது. எங்கும் ஊழல் நடந்துவிடக் கூடாது என்று கண்காணித்து வருகிறோம்.

தவறுகள் எங்கு நடந்தாலும் அதை சுட்டிக்காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வருவாய்த் துறை தொடா்பான வரவு - செலவு கணக்குகள் உள்ளிட்ட புள்ளி விவரங்கள் கொடுப்பதற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் தேவைப்படுகிறது. வருவாய்த் துறையில் பட்டா பதிவேற்றம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் என்னை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.