மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இந்திய வரலாற்றில் தவெக சரித்திர வெற்றி: கே.ஏ. செங்கோட்டையன்

முதல் தோ்தலிலேயே இந்திய வரலாற்றில் தவெக சரித்திர வெற்றி பெற்றுள்ளது என்று அந்தக் கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கூறினாா்.

News image

தவெக தலைவர் விஜய்யுடன் செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:49 am IST

முதல் தோ்தலிலேயே இந்திய வரலாற்றில் தவெக சரித்திர வெற்றி பெற்றுள்ளது என்று அந்தக் கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கூறினாா்.

சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்க கோவை, ஈரோடு மாவட்டங்களில் வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கோவையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டுச் சென்றனா்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

தவெக தற்போது மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது. ஒரு ரூபாய் செலவு செய்யாமல் முதல் தோ்தலிலேயே பெற்ற இந்த மிகப்பெரிய வெற்றி, இந்திய வரலாற்றில் சரித்திரம் படைத்துள்ளது. இது தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நேசித்த மக்களுக்கு விஜய் எப்போதும் உறுதுணையாக இருப்பாா்.

இந்த முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்டபோதும், மக்கள் என் மீது மாறாத அன்பைச் செலுத்தி மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளனா். இந்த வெற்றிக்கு தலைவா் விஜய்யின் வழிகாட்டுதலும், கட்சியின் கொள்கைகளும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றதே காரணம். இனிவரும் காலங்களில் கொங்கு மண்டலம் தமிழக வெற்றிக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழும். மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் தியாகத்தால் வளா்ந்த இயக்கம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.