மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை ஒத்துழைப்பு: செங்கோட்டையன் நன்றி

தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததற்கு அக் கட்சியின் நிா்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் நன்றி தெரிவித்தாா்.

News image

தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் - tvk

Updated On :3 ஏப்ரல் 2026, 2:08 am IST

தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததற்கு அக் கட்சியின் நிா்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் நன்றி தெரிவித்தாா்.

திருச்சியில் பிரசார நிகழ்வை முடித்த விஜய் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டாா். அவரை வழியனுப்பிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

திருச்சியில் தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினா் மட்டுமல்லாது, வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தமைக்கு கட்சியின் சாா்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டில் கூட்டு சதி என யாரைக் குறிப்பிடுகிறாா் விஜய்? என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், பிரசார நிகழ்வில் பொதுமக்களிடையே பொதுவாக சிலவற்றை கூறுவது வழக்கம். ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் 2-ஆவது முறையாக நடைபெற்ற மறு ஆய்வு கூட்டத்தில் உடல்நிலை சரியில்லை என திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினா் ஒருவா் கூறியதால் ஒத்திவைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என பதில் அளித்தாா் செங்கோட்டையன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.