கோபியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபியில் தனியாா் கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோபி தொகுதி வளம் பெறுவதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற செயலாற்றுவேன். கோபி நகரில் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்க விரைவில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோபியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமாக உருவாக்க முதல்வரிடம் பேசி நிதிநிலை ஒதுக்கீட்டுக்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பவானி ஆற்றின் குறுக்கே நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

பொதுபோக்குவரத்து சேவை தரமானதாக வழங்க வேண்டும் - அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன்
கோபியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

