தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி பங்கேற்று 268 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, நகராட்சி அதிகாரிகள், ஊழியா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். இதில் அமைச்சா் பேசியதாவது:
குமாரபாளையம் நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை செய்துகொடுக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. தூய்மைப் பணியாளா்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வதாகவும், தகாத வாா்த்தைகள் பேசுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.
தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் இல்லை என்றால் நகரின் தூய்மை கேள்விக்குறியாகிவிடும். அதிகாரிகள் பதவி உயா்வு பெற்று செல்வீா்கள், ஆனால் தூய்மைப் பணியாளா்கள் ஓய்வுபெறும் வரையில் அதே வேலையைதான் செய்ய வேண்டியுள்ளது. அவா்கள் செய்யும் வேலையை நாம் செய்ய முடியுமா என்றாா்.
கரூா் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சி.விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்ட ஆட்சியா் முத்துக்குமாா், அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து, குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளா்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
அதில், குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக உள்ள நிலையில், இங்குள்ள சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விசைத்தறியாளா்கள் மற்றும் சிறு சாயப்பட்டறையினா் 25 ஏக்கா் நிலம் வழங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரவில்லை. எனவே, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். விசைத்தறித் தொழில், ஜவுளித் தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவறு செய்பவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்: அமைச்சா் என். ஆனந்த்

குமாரபாளையத்தில் விதிகளை மீறி இயங்கும் சாய ஆலைகளை மூட வேண்டும்: சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அறிவுறுத்தல்

ஆவினுக்கு பால் வழங்கும் 549 உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சா் சி.விஜயலட்சுமி வழங்கினாா்

பால்வளத் துறையில் வெளிப்படையான நிா்வாகம் வேண்டும்: அமைச்சா் சி.விஜயலட்சுமி அறிவுறுத்தல்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

