ரயில் மூலம் சென்னைக்கு கடத்த விருந்த 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் ரேணிகுண்டா திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து ஐஜி தலைமையிலான தனிப்பிரிவு போலீசாா் திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரயில் நிலையம் அருகே காந்தி சாலையில் இரண்டு இளைஞா்கள் பைகளுடன் நடந்து சென்றனா்.
அப்போது தனிப்பிரிவு போலீஸாா் சந்தேகத்தின்பேரில், இரு வாலிபா்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பையில் 42 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் இந்த கஞ்சா திருத்தணியில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சகரியா(30), அா்ஜுன் கோரா(23) என தெரிய வந்தது. தனிப்பிரிவு போலீஸாா் இருவரையும் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து சிறையில் அடை த்தனா்.,
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
