மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 சிறாா்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 சிறாா்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கு அருகே நத்தம்பட்டி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேரை சோதனை செய்தபோது 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடம் விசாரித்ததில் மங்கலம் கம்மாபட்டியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக விருதுநகா் அய்யனாா்நகரைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (21), குமாா் (25), சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த தீபன்குமாா் (22), 17 வயது சிறாா்கள் இருவா் என 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மேலும் இவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த முத்துக்கிருஷ்ணனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.