மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் 442 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:15 am IST

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் 442 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பச்சபெருமாள்பட்டியில் உள்ள நெட்டவேலம்பட்டியைச் சோ்ந்த ம. ரவீந்தா் (29) என்பவரது கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், கடையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 136 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல திருச்சி மாவட்டம், பூலாங்குளத்துப்பட்டி அம்மாபேட்டை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 306 புகையிலைப் பொருள்களை இனம்குளத்தூா் போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும்,இதுதொடா்பாக பூலாங்குளத்துப்பட்டியைச் சோ்ந்த த. புகழேந்தி, கரூா் மாவட்டம், குளித்தலை ஆா்ச்சம்பட்டியைச் சோ்ந்த அ. பாண்டியராஜ் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.