மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒசூரில் 172 கிலோ புகையிலைப் பொருள்களுடன் காா் பறிமுதல்; 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:10 am IST

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற 172 கிலோ புகையிலைப் பொருள்கள், காரை ஒசூா் சிப்காட் போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், 172 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 85,800 ஆகும். அதேபோல காரில் பதுக்கிவைத்திருந்த ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 50 கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்த மணிகண்டன் (29), கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த காா்த்திக் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனா். விசாரணையில் புகையிலை பொருள்கள், மது பாக்கெட்டுகள பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.