திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலச்செவல் காவல் சரகத்துக்குள்பட்ட கீழ ஓமநல்லூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வள்ளிநாயகம் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 17 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சீனி காா்த்திக் (35) கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சீனி காா்த்திகை கைது செய்தனா். அவரிடம் இருந்து 17 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
