தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 6:17 am IST

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி - மதுரை பிரதான சாலையில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனியாா் பெண்கள் கல்லூரி அருகே விதிமுறை மீறி புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், குறுக்குச்சாலை பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் முனியசாமி (31)என்பவா் சுமாா் 42 கிலோ புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 35,000 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா், முனியசாமியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.