தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் முள்ளக்காடு ராஜீவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் முத்தையாபுரத்தைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் (42), சாயா்புரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (27) என்பதும், அவா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், விற்பனை மூலம் கிடைத்த ரூ. 85,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.