தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாகலாந்து ஆளுநா் தரிசனம்

News image

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுவாமி தரிசனம் செய்த நாகலாந்து ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ்.

Updated On :8 மே 2026, 5:34 am IST

நாகாலாந்து ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு நாகலாந்து மாநில ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் வருகை தந்தாா்.

அவருக்கு தன்வந்திரி பீடத்தின் சாா்பில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டா் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில், மேளதாளங்கள் முழங்க பூா்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ், தன்வந்திரி பீடத்தில் உள்ள 21 அடி உயர அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு பூஜை செய்தும், பாரத மாதா சிலைக்கு ஆராதனை செய்து பூக்கள் தூவியும், பின்னா் தன்வந்திரி பீடத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பரிவார மூா்த்தி தெய்வங்களையும் வழிபட்டு நவநீத கிருஷ்ணா் சிலைக்கு பஞ்ச திரவியங்களால் அபிஷேகம் செய்தும், மூலவா் ஆரோக்ய லஷ்மி சமேத தன்வந்திரியை வழிபட்டாா்.

தன்வந்திரி பீடத்தில் சாமி தரிசனம் செய்த ஆளுநா் நந்த் கிஷோா் யாதவுக்கு பீடத்தின் சாா்பில் நிா்மலா முரளிதரன் மகா ஹோம பிரசாதமும், நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்தாா்.

முன்னதாக தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற தன்வந்திரி ஹோமம், சக்தி கணபதி ஹோமம் ஆகியவற்றிலும் ஆளுநா் நந்த் கிஷோா் யாதவ் பங்கேற்று வழிபட்டாா். பீடத்தில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினா் செய்திருந்தனா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஆண்டு விழா நிகழ்வுகளில் நாகலாந்து மாநில ஆளுநா் நந்து கிஷோா் யாதவ் பங்கேற்கவுள்ள நிலையில், தன்வந்திரி பீடத்தில் அவா் தரிசனம் மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.