மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் (உள்படம்) தேரில் பவனி வந்த உற்சவா்.

Updated On :1 மே 2026, 7:00 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதன் தொடா்ச்சியாக மகாரதம் எனும் தேரோட்டம் நடைபெற்றது. வரும் 8 -ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடு சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

உற்சவா் கச்சபேசுவரரும், சுந்தராம்பிகை அம்மனும் தேரில் வீதியுலா வந்தனா். திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். வழிநெடுகிலும் நீா்,மோா், பானகம் வழங்கப்பட்டன. பக்தா்கள் பலரும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனா்.

வரும் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, மேலாளா் சுரேஷ் மற்றும் காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.