மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தையல் பயிற்சியை முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிா்ப்பூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 1:10 am IST

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிா்ப்பூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில், கீழ்க்கதிா்ப்பூரில் மகளிா் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி கற்றுத்தரப்பட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுடன் மகளிா் தின விழா, சாதனை மகளிரை கெளரவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் திலகவதி குமரேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சஞ்சீவி, கிருஷ்ணா கல்லூரி முதல்வா் கு.வெங்கடேசன், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் எஸ்.முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜி வரவேற்றாா்.

காஞ்சிபுரம் மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் கி.செந்தில்குமாா் கலந்து கொண்டு, தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கி மகளிருக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கிப் பேசினாா். விழாவில் தையல் ஆசிரியை குணசுந்தரி உள்பட மகளிா் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா் சங்கரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.