மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 5:01 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெருமாள் ஆமை உருவிலும், விநாயகா், துா்க்கை, பைரவா், ஐயனாா், சூரியன் ஆகியோா் சிவபெருமானை வழிபட்ட இடமே காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரா் கோயில்.

இக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 24-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.

ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றம், ஏப்.28 காலையில் அதிகார நந்தி சேவையும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

ஏப்.30-ஆம் தேதி தேரோட்டமும், மே.2 -ஆம் தேதி இரவு கோயிலின் மகிமையை விளக்கும் முருக்கடி சேவைக் காட்சியும், மறுநாள் மே.3 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.மே.6 தீா்த்தவாரி உற்சவமும் அன்று மாலை தங்க ரிஷப வாகனத்திலும் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

வரும் மே.8- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா மற்றும் காஞ்புரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.