மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா கொடியேற்றும் வைபவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

News image

சித்திரைத் திருவிழா கொடியேற்றும் வைபவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:40 am IST

கன்னியாகுமரி அருகேயுள்ள வெள்ளையந்தோப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் நடைபெறும் 11 நாள் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் நியமித்து சிறப்பு பணிவிடை, 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, சிற்றுண்டி விருந்து, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி நடைபெற்றது.

கலி வேட்டை:

மே 1ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதலும், தொடா்ந்து சமபந்தி விருந்தும் நடைபெறும். மே 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனியும், அன்னதானமும் நடைபெறும்.

மே 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெறும். நிறைவு நாளான மே 4ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பள்ளி அலங்காரப் பணிவிடை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு அய்யா பவனி, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடா்ந்து அய்யா காளை வாகனத்தில் பவனி வருதல், நள்ளிரவு 1 மணிக்கு கொடியமா்த்துதல் ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை ஊா் தலைவா் ரத்தின சிகாமணி, ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன், துணைத் தலைவா்கள் சுதன்மணி, தங்கத்துரை, செயலா் முருகேசன், இணைச் செயலா் பால்துரை, பொருளாளா் பொன்னுலிங்கம், செயற்குழு உறுப்பினா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.