தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை விநாயகா் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. முதல்நாள் விழாவான ஏப்.6 காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் காப்புக் கட்டுதல், நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.
காப்புக் கட்டுதல் வைபவத்தின்போது வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தா்கள் மற்றும் நோ்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தா்கள் திரளாக வந்து கோயிலில் காப்புக் கட்டி விரதம் தொடங்குவா்.
ஏப். 7 முதல் 13ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும், 13ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ஆம் திருநாளான ஏப்.14ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். காலை 10.31 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து, தேரடி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பத்தாம் திருவிழாவான ஏப்.15 இரவு 7 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலா, ஏப்.16 மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சி, அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவுறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் க. அருட்செல்வன், செயல் அலுவலா் கி. உமா மற்றும் கோயில் பணியாளா்கள், ஊா்ப் பொதுமக்கள் செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப். 6, மே 6! சென்னைக்கு ஆறுதல் சொன்ன கோடை மழை! அடுத்தடுத்த நாள்களிலும் மழை இருக்கா?

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் தேரோட்டம்

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

