தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஏப். 6, மே 6! சென்னைக்கு ஆறுதல் சொன்ன கோடை மழை! அடுத்தடுத்த நாள்களிலும் மழை இருக்கா?

ஏப். 6 மற்றும் மே 6ம் தேதிகளில் சென்னைக்கு ஆறுதல் சொன்ன கோடை மழையால் மக்கள் உற்சாகம்.

News image

சென்னையில் மழை - File photo

Updated On :6 மே 2026, 12:08 pm IST

சென்னையில் கோடை கொளுத்தத் தொடங்கிய போது, ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது போல மிகச் சரியாக மே 6ஆம் தேதியும் கோடை மழை வெளுத்து வாங்கியது.

கோடை வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்த நேரத்தில் மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்று கேட்ட மக்கள் சற்று பதறித்தான் போயிருப்பார்கள்.

ஆனால், நீங்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்பது போல, இத்தனை நாள்களும் சென்னையை வாட்டி வதைத்து வந்த சூரியனோ, மே 4ஆம் தேதி ஆளையேக் காணோம் என்பது போல மறைந்துவிட்டது. கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இன்றும் அப்படியே இருந்த நிலையில், திடீரென 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சரியாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 11.30 மணிக்கு மழை பெய்ததைப் போல ஒரு மாத இடைவேளையில் மீண்டும் அதே ஆறாம் தேதி 11.30 மணிக்கு, மணி அடித்தது போல மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.