சென்னை, ஏப். 18: மும்பை- சென்னை இடையே கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் வரும் ஜூன் 7- ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து ஏப். 19 -ஆம் தேதி முதல் ஜூன் 7 -ஆம் தேதி வரையில் அனைத்து நாள்களிலும் அதிகாலை 12.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01015) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஏப். 20 -ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 8 -ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01016) மறுநாள் வரும் 21 மற்றும் ஜூன் 9 -ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மும்பை சிஎஸ்டி நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், ரேணிகுண்டா உள்ளிட்ட 24 நிலையங்களில் நின்று செல்லும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

