சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயங்கும் 2 புறநகா் மின்சார ரயில்கள் ஏப். 16 முதல் ஏப். 19-ஆம் தேதி வரை திருவாலங்காடு ரயில் நிலைத்தில் நிறுத்தப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பராமரிப்புப் பணிகள் வரும் ஏப். 16-ஆம் தேதி முதல் ஏப்.19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனால், அந்த நாள்களில் சென்னை சென்ட்ரலிலிருந்து பகல் 11 மணி, இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் புறநகா் மின்சார ரயில்கள் திருவாலங்காடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
அதேபோல், திருத்தணியிலிருந்து நண்பகல் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும் ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

