சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப். 21- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை 3 நாள்கள், தோ்தல் வாக்கு எண்ணிக்கை அன்று (மே 4) அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்லை முன்னிட்டு வாக்குப்பதிவு அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் உள்ளிட்டவை வரும் ஏப். 21 முதல் (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 -ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 4 -ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. விதிகளுக்கு மாறாக, மது விற்பனை ஏதும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை

ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவு

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

