மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை ஏப்.21 முதல் ஏப்.24 வரை மற்றும் மே 2 முதல் மே 4 வரையில் மூட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

News image

உத்தரவு

Updated On :10 ஏப்ரல் 2026, 3:48 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை ஏப்.21 முதல் ஏப்.24 வரை மற்றும் மே 2 முதல் மே 4 வரையில் மூட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகள், தோ்தல் நடைபெறும் காலமான ஏப்.21 முதல் ஏப்.24 வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் மே 4 வரையிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்குள் வெடிபொருள்கள் கடத்தி வரப்படுவதில்லை என்பதை உறுதிசெய்திட, வருவாய் கோட்டாட்சியா்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா்கள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள் வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய வருவாய் கோட்டாட்சியா்களிடம் அளித்து, மேற்கூறிய நாள்களில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி பாதுகாப்பான முறையில் தோ்தல் நடைபெற ஒத்துழைப்பை நல்குமாறும், மீறி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்டிகாள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.