மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

News image

கடைகளை மூட அறிவுறுத்தல்... - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:07 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில், தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் ஏப். 24 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4 ஆம் தேதி வரையிலும் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏப். 23-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று இயங்கிவரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிபொருள் கிடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் 24 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4 ஆம் தேதி வரையிலும் மூட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிபொருள் கிடங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கண்ட தேதிகளில் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், அதன் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.