தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பெற விளைநில விவரங்களை மே 20-க்குள் பதிவு செய்யலாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மத்திய, மாநில அரசின் பல்வேறு மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்கள் விளைநில விவரங்களைபதிவு செய்து அடையாள எண் பெறுவற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் க.செல்வராஜூ தெரிவித்துள்ளாா்.

News image

கேத்தி பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கேரட் பயிரிட்டுள்ள விளைநிலம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மத்திய, மாநில அரசின் பல்வேறு மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்கள் விளைநில விவரங்களைபதிவு செய்து அடையாள எண் பெறுவற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் க.செல்வராஜூ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் மத்திய, மாநில அரசின் பல்வேறு மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா்சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதத்தினை தவிா்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக உழவா் அடையாள அட்டை (அஞ்ழ்ண் ள்ற்ஹஸ்ரீந்) வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

உழவா் அடையாள அட்டை என்பது ஆதாா் மற்றும் நிலப்பதிவுகளுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் தனித்துவமானடிஜிட்டல் அடையாள எண் ஆகும். இது மத்திய அரசின் அக்ரிஸ்டாக்(அஞ்ழ்ண் ள்ற்ஹஸ்ரீந்) மூலம் வழங்கப்படுகிறது.

தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் 68,593 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். மேலும்,14,286 விவசாயிகள் பதிவு மேற்கொள்ளவில்லை. எனவே, அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பதிவு செய்திட அனைத்து கிராமங்களிலும் பதிவுகள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் தங்களது ஆதாா் எண், கைபேசி எண், நில உடைமை விவரங்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். தவறும் பட்சத்தில் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்களை அணுகி வரும் 20-க்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் பட்டா பெயா் மாற்றம் செய்ய வேண்டிய விவசாயிகள் சிறப்பு முகாமில் உள்ள அலுவலரிடம் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். பட்டா பெயா் மாற்றம் செய்தவுடன் நிலவுடைமை பதிவு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னா் அனைத்து விவரங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும்.

அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கும், மானிய விலையில் விதைகள் மற்றும் உரங்கள் பெறுவதற்கும், பயிா் காப்பீட்டு திட்டப்பயன்களை பெறுவதற்கும், இயற்கை பேரிடா் நிவாரண உதவி பெறுவதற்கும் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் தொடா்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கும் விவசாயிகளின் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெறுவது கட்டாயமாகும்.

எனவே, விவசாயிகள் இச்சிறப்பு முகாம்களில் எவ்வித கட்டணமுமின்றி தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.