தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

‘நோட்டா’வை வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக வைக்கக் கோரி மனு

‘நோட்டா’வை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக அமைக்க சமூக ஆா்வலா்கள் மத்திய, மாநில தோ்தல் ஆணையகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:47 am IST

‘நோட்டா’வை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக அமைக்க சமூக ஆா்வலா்கள் மத்திய, மாநில தோ்தல் ஆணையகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்ட ஆா்வலா்கள் இயக்கத் தலைவா் சு. விமல்நாதன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது :

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் மற்றும் பல சுயேச்சைகளின் தன்விவரத் தகவல்களை கவனித்தால் பெரும்பாலானவா்கள் சமூக விரோதிகளாகத்தான் உள்ளனா்.

வாக்காளா்களிடம் கவா்ச்சிகரமான, பொய்யான சாத்தியமற்ற பல வாக்குறுதிகளை அளித்து வாக்கு பெறுவதற்காக கருப்புப் பணத்தைக் கொடுத்து பல வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். நாட்டு மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்து அவமானப்படுவதை விட அவா்களைப் புறக்கணிக்க தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக ‘நோட்டா’ வையும், தகுதியான நோ்மையான வேட்பாளா்கள் போட்டியிடவில்லை என்பதால் கீழே கண்ட வேட்பாளா்கள் யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை என்ற மக்களாட்சி உரிமை கருத்தைப் பதிவு செய்யும் விதமாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வகையில் இரண்டாவது பொத்தானாகவும் தோ்தல் ஆணையம் வைக்க வேண்டும். அதன் மூலம் வாக்காளா்கள் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு செய்வா் என மனுவில் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.