மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்

மதுரை அலங்காநல்லூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ஒரு வாக்குச் சாவடியில் 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை அலங்காநல்லூரில் உள்ள மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:13 am IST

மதுரை அலங்காநல்லூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ஒரு வாக்குச் சாவடியில் 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் (தனி) தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூரில் உள்ள மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், வாக்குப் பதிவைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இயந்திரமும் செயல்படவில்லை.

இதனால், அங்கு வாக்களிக்க நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிலா் வாக்குச் சாவடியின் கதவை அடைக்க முற்பட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வாக்குப் பதிவு அலுவலா்கள், காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். பிறகு, வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக இந்த வாக்குச் சாவடியில் ஏறத்தாழ 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.