மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

News image

PTI

Updated On :24 ஏப்ரல் 2026, 4:48 am IST

வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தோ்தல் தாமதமானது.

இதனால், வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை, வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாதாங்குப்பம் வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை காலை 6.45 மணி முதல் வாக்காளா்கள் வரத் தொடங்கினா். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டிய நிலையில், அங்கு வாக்குப் பதிவு இயந்திரம் சரிவர செயல்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தோ்தல் அலுவலா்கள் அதைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு, கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோன்று, பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட வியாசா்பாடி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த விவிபேட் (வாக்கு ஒப்புகை) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.