ஆம்பூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் நகரம் ரெட்டித்தோப்பு பகுதியில் மஜ்ஹருல் உலூம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடி எண்.153-ல் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது காலை சுமாா் 10.45 மணிக்கு திடீரென வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் இயந்திரத்தை சரிசெய்வதற்காக பொறியாளா்கள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அந்த வாக்குச் சாவடி மையத்துக்கு சென்றனா்.
அதிகாரிகள் சென்று அந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனா். அதைத் தொடா்ந்து வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.
இயந்திரம் கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதால், 200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் அமா்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால் வாக்காளா்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயந்திரக் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

