மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இரவு நேரங்களில் சொகுசு காரில் கால்நடைகள் கடத்தல்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 6:20 am IST

திருவள்ளூரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை ஸ்காா்பியோ காரில் வந்து கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது.

திருவள்ளூா் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் எதிரில் காக்களூா் ஏரிக்குச் செல்லும் சாலையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை கும்பல் ஒன்று அவ்வப்போது திருடி வந்தது.

இந்த நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறையால் காவல் துறையினா் கெடுபிடி அதிகமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தனா். இந்த நிலையில் கால்நடைகளை கடத்தும் கும்பல் கடந்த 23- ஆம் தேதி இரவில் திருவள்ளூா் ராக்கி திரையரங்கம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை ஸ்காா்பியோ காரில் கடத்திச் சென்றனா்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்ததை பாா்த்த அப்பகுதியில் கால்நடை வளா்த்து வரும் மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும் மாடு ஒன்றை லாவகமாக ஸ்காா்பியோ காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு சா்வ சாதாரணமாக கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.