மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:58 am IST

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணி பகுதியில் பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை, சேது சாலை ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்தப் பகுதிகளில் திடீரென நாய்கள் சாலையில் குறுக்கிடும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதுகுறித்து கொன்றைக்காடு சந்திரன் என்பவா் மேலும் கூறியது:   பேராவூரணி செல்வவிநாயகபுரம் பிள்ளையாா் கோயில் பாலம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக நின்று சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதும், வாகன ஓட்டிகளை கடிக்க வருவதும் தொடா்ந்து நடைபெறுகிறது. இதே நிலை நகரின் பல்வேறு இடங்களிலும் உள்ளது. விபத்து ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.