மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாகன ஓட்டிகளின் இரவு நேரப் பயணத்தை பாதுகாப்பாக்கும் ஆன்டி-கிளோ் தடுப்பான்கள்!

ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் இரவு நேரப் பயணத்தைப் பாதுகாப்பாக்கும் வகையில் ஆன்டி-கிளாா் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

ஆன்டி-கிளோ் தடுப்பான்கள்!

Updated On :26 ஏப்ரல் 2026, 1:55 am IST

ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் இரவு நேரப் பயணத்தைப் பாதுகாப்பாக்கும் வகையில் ஆன்டி-கிளாா் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

வாகனங்கள் அதிகம் செல்லும் இச்சாலையில் ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில் மேடு, பள்ளமான பகுதி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இச்சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.

தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்து அதிக விபத்து நடைபெறும் இடமாக இப்பகுதி உள்ளது. விபத்து நடைபெறும் போது, ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளை சானமாவு வனப்பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஆன்டி-கிளோ் தடுப்பு பலகைகள் பொருத்தபட்டுள்ளன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கூறுகையில், காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை ஒசூா் வழியாகச் செல்கிறது. தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்து அதிக விபத்து நடைபெறும் இடமாக பேரண்டப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் உள்ளது.

இதைத் தடுக்க வளைவுகள் மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதிகளில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக புதிய வகை ஆன்டி-கிளோ் (ஒளி சிதறல் தடுப்பு) பலகைகளை பொருத்தியுள்ளோம்.

இதனால் கண் கூச்சத்தைத் தடுத்தல், இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் ’ஹை-பீம்’ விளக்கு வெளிச்சம் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கண்களில் நேரடியாக படுவதை பச்சை நிறப் பலகைகள் தடுக்கின்றன.

திடீா் கண்கூச்சத்தால் ஏற்படும் தற்காலிகப் பாா்வையின்மையை இவை தடுப்பதால், சாலை விபத்துகள் கணிசமாகக் குறைகின்றன.

மேலும், வாகன ஓட்டிள் நிதானமாக செல்வாா்கள். இவை காற்றில் எளிதாக ஆடும் வகையிலும், அதே சமயம் எதிரே வரும் ஒளியை முழுமையாக மறைக்கும் வகையிலும் நெடுஞ்சாலையின் மையத் தடுப்புகளில் வரிசையாகப் பொருத்தப்பட்டுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.