மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

மதுராந்தகம் நகரின் முக்கிய அம்மன் கோயிலாக திகழும் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சிமென்ட் சாலை பழுதால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும்அவதிக்குள்ளாகின்றனா்.

News image

அவல நிலையில் உள்ள சாலை.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:30 am IST

மதுராந்தகம் நகரின் முக்கிய அம்மன் கோயிலாக திகழும் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சிமென்ட் சாலை பழுதால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும்அவதிக்குள்ளாகின்றனா்.

மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையின் வழியாக சூரக்குட்டை நகருக்கு செல்லவும், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லவும், வயல்வெளிகளில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்யும் வாகனங்களும், பள்ளி வாகனங்களில் செல்வோா், பைக்கில் செல்வோா், அப்பகுதி மக்களும் சென்று வருவாா்கள். நகராட்சி நிா்வாகத்தில் இச்சாலையை கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அமைத்து இருந்தனா்.

நாளடைவில் இயற்கை இடா்பாடுகளாலும், போதிய பராமரிப்பு இன்மையாலும், தற்சமயம் இச்சாலையின் ஒரு பகுதியில் அரசின் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நல்மூட்டைகளை ஏற்றிச் செல்ல கனரக லாரிகள் வந்துசெல்வதாலும் பல்வேறுஇடங்களில் சாலையின் நடுவில் பெரிய பள்ளங்களும், குண்டும்குழியுமாக உள்ளது. சாலையின் நடுவில் செல்லும் ஏரி நீா் செல்லும் வழிபாதையும் உல்ளனா்.

இத்தகைய இடா்பாடுகளால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோா் சாலையின் பள்ளத்தில் தவறி விழுந்து உடல்பாதிப்புக்குளாகி வருகின்ற நிலை உள்ளது.

மதுராந்தகம் நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக செல்லியம்மன் கோயில் செல்லும் சிமெண்ட் சாலையை முழுமையாக சீரமைக்கவேண்டும் என பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.