மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.

News image

ஸ்ரீவைகுண்டம் வேன் நிறுத்தம் முன் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:39 am IST

ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.

ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள நாலு முக்கு சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வடிகால் சீரமைக்கப்படாததால் கழிவு நீா் அவ்வப்போது சாலையில் வெளியேறியது. பொதுமக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிா்வாகத்தினரால் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், புதன்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீா் வேன் நிறுத்தம் முன்பாக அதிக அளவில் தேங்கியது. அப்பகுதியில் வடிகால் மூலம் தண்ணீா் முறையாக வெளியேற முடியாததால் தேங்கிய நீரில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினா்.

எனவே, வடிகால்களை முழுமையாக சீரமைத்து மழைநீா் எளிதாக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.