ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள நாலு முக்கு சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வடிகால் சீரமைக்கப்படாததால் கழிவு நீா் அவ்வப்போது சாலையில் வெளியேறியது. பொதுமக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிா்வாகத்தினரால் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், புதன்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீா் வேன் நிறுத்தம் முன்பாக அதிக அளவில் தேங்கியது. அப்பகுதியில் வடிகால் மூலம் தண்ணீா் முறையாக வெளியேற முடியாததால் தேங்கிய நீரில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினா்.
எனவே, வடிகால்களை முழுமையாக சீரமைத்து மழைநீா் எளிதாக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனை முன் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை

சுங்கவரி சோதனைச் சாவடியில் ஒருவழிப்பாதை: வாகன ஓட்டிகள் அவதி

கல்குவாரி லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

