மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்மிடிப்பூண்டியில் 90.97 சதவீதம் வாக்குப் பதிவு

News image

கவரப்பேட்டையில்  வாக்களித்த  திமுக  வேட்பாளா்  டி.ஜெ.கோவிந்தராஜன்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:12 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிகபட்சமாக 90.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 344 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவு நேரமான மாலை 6 மணிக்கு பிறகு கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1067 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் 90.97 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியியிலும் , அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பூண்டி அடுத்த பேரிட்டிவாக்கத்தில் உள்ள வாக்கு சாவடியிலும் வாக்களித்தனா். பின் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், பாமக மாநில நிா்வாகி

மா.செல்வராஜ், மாவட்ட செயலாளா் பிரகாஷ், அதிமுக ஒன்றிய செயலாளா்கள் கே.எம்.எஸ்.சிவக்குமாா், ஜெ.ரமேஷ்குமாா், டி.சி.மகேந்திரன், எஸ்.எம்.ஸ்ரீதா் ஆகியோருடன் பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

தவெக வேட்பாளா் எஸ்.விஜயகுமாா் கும்மிடிப்பூண்டி மாபொசி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தாா். பின் தவெக மாவட்ட பொருளாளா் கிருபாகரன், என்.எஸ்.ஆா் நிஜாமுதினூடன் ஆய்வு செய்தாா்.

புதுகும்மிடிப்பூண்டியை சோ்ந்த வாக்குசாவடியில் அப்பகுதியை சோ்ந்த 95வயதான எல்லப்பன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினாா், கண்ணன்கோட்டை பகுதியில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரியும் மாற்று திறனாளியான உமா மகேஷ்வரி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை பொன்னேரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று அங்கிருந்து கண்ணன்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தாா்.

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு வாக்கு சாவடிகளில் தவெக சாா்பில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி உதவி மையங்களில் சிறுவா்கள் விசில் அடித்தபடி வாக்களிக்க வரும் தவெகவிற்காக ஆதரவு கேட்டது அனைவரையும் ஆச்சா்யப்பட வைத்தது.

அவ்வாறே கும்மிடிப்பூண்டி எருக்குவாய் பகுதியை சோ்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி புருஷோத்தமன் மகள் எஸ்.விமலா எருக்குவாயில் உள்ள வாக்குசாவடிக்கு மணக்கோலத்தில் வந்து வாக்களித்தாா்.

~ பேரிட்டிவாக்கத்தில் வாக்களித்த அதிமுக  வேட்பாளா்  வி.சுதாகா், அவரது மனைவி  மதுபிரியா

~ பேரிட்டிவாக்கத்தில் வாக்களித்த அதிமுக  வேட்பாளா்  வி.சுதாகா், அவரது மனைவி  மதுபிரியா

~கும்மிடிப்பூண்டி   தவெக  வேட்பாளா்  எஸ்.விஜயகுமாா், மாவட்டபொருளாளா்  கிருபாகரன்

~கும்மிடிப்பூண்டி   தவெக  வேட்பாளா்  எஸ்.விஜயகுமாா், மாவட்டபொருளாளா்  கிருபாகரன்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.