தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
சிவகிரி, சின்ன ஆவுடைப்பேரி, கலிங்கல் ஓடைப் பாலம் அருகே சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அவா்கள் சிவகிரி உள்ளாரைச் சோ்ந்த காா்த்திக், சிவகிரி ஓடைத் தெரு கவில்குமாா், வடக்குத் தெரு கண்ணன், மாரிச்செல்வம், சொக்கநாதன்புதூா் மணிகண்டன், சிங்கராஜ், ஊத்துமலை மணிகண்டன் என்பதும், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டி அவா்களிடம் இருந்து பணம், நகைகளைப் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து, போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

