தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...

News image

சீமான் வேட்புமனு தாக்கல் - X

Updated On :30 மார்ச் 2026, 1:22 pm IST

காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியுள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் ஆகியோரைத் தொடர்ந்து காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் வேட்பாளருமான சீமான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தன்னுடைய தாய் மற்றும் மனைவியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் பிரபு போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

NTK Chief Ministerial Candidate Seeman Files Nomination in karaikudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.