மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!

மேட்டூர் நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது செய்யப்பட்டது தொடர்பாக...

News image

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் - படம்: டிஎன்எஸ்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:52 pm IST

மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் மேச்சேரி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்புமணி பிரசாரத்தின்போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் உள்ளே நுழைய முயன்றதால், அவரைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுரை வழங்கினார்கள்.

அப்போது அங்கிருந்து போக மறுத்த வித்யா வீரப்பன், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் அழுதபடியே அங்கிருந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள்.

இது குறித்து வித்யா வீரப்பன் கூறுகையில், ”நாங்கள் சிந்தாமணி முதல் கோவிந்தபாடி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்துவதற்காக முன்கூட்டிய அனுமதி பெற்றோம். ஆனால், அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்காக எங்களை தடுத்து நிறுத்தினார்கள். நாங்கள் நீண்ட நேரமாக காத்திருந்தபோதும், எங்களுக்கு அந்த வழியாக செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

அதனால்தான் நான் அன்புமணி ராமதாஸிடம் சென்று இதைப்பற்றி கூறலாம் என்று சென்றேன், அவர் என்னை சிறுவயதிலிருந்து வளர்த்தவர், அந்த உரிமையில்தான் நான் அவரிடம் இதைப் பற்றி கூறலாம் என்று சென்றேன். ஆனால், அவர் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

என்னை மட்டும்தான் அனைத்து இடங்களிலும் சோதனை செய்கிறார்கள், வேறு எந்த வேட்பாளர்களையும் சோதனை செய்வதில்லை” என்று கூறினார்.

”அவர் சரியான அனுமதி பெறவில்லை, அதனால்தான் தடுத்து நிறுத்தப்பட்டார்” என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனால், அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது செய்யப்பட்டார். இதனால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.

Summary

The arrest of Vidhya Veerappan, the Naam Tamilar Katchi candidate for Mettur, has caused a sensation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.