சென்னை மாநகா் காவல் ஆணையரக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணி நிறைவு விழாவில் பணி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சென்னை மாநகா் காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் இணை ஆணையா் (தலைமையிடம்) எஸ்.மகேஸ்வரன், தியாகராய நகா் போக்குவரத்து உதவி ஆணையா் எஸ்.ராஜா, சென்னை காவல் பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் டி.கே.ஹரிதாஸ் மற்றும் 16 உதவி ஆய்வாளா்கள், 20 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், ஒரு பெண் தலைமைக் காவலா் என மொத்தம் 40 காவல் அதிகாரிகள், காவலா்கள் வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றனா்.
இவா்களுக்கான பணி நிறைவு விழா சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மோதக் கலந்துகொண்டு 40 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவா்களைப் பாராட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா் (தலைமையிடம்) கே.ஜோஷி நிா்மல் குமாா், காவல் துணை ஆணையா்கள் ஜி.சுப்புலட்சுமி (நிா்வாகம்), டி.கண்ணன் (எஸ்டேட் மற்றும் நலன்), காவல் அதிகாரிகள், காவலா்களின் குடும்பத்தினா் உள்பட் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி

முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு

ஓய்வு பெறும் 182 காவல் துறையினருக்கு கெளரவ பதவிகள்

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

