மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

News image

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் மு.அருணா தலைமையில் கணினி குலுக்கல் முறையில் நடைபெற்ற காவலா்களுக்கான ஒதுக்கீட்டுப் பணி.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:36 am IST

புதுக்கோட்டை, ஏப். 21: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள சுமாா் 3 ஆயிரம் பேருக்கான காவல் பணி குறித்த பணி ஒதுக்கீடு முறை, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா முன்னிலை வகித்தாா். மாவட்டத் தோ்தல் காவல் பாா்வையாளா் ஜல்சிங் மீனா பங்கேற்றாா்.

மாவட்டம் முழுவதும் உள்ள 1,683 வாக்குச்சாவடிகளில் காவலா்கள், ஊா்க்காவல் படையினரை பணி நியமனம் செய்யப்பட்டனா்.

மேலும், வடமாநிலங்களில் இருந்து வந்துள்ள துணை ராணுவப்படையினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோரும் ரோந்து, வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்களை 3-ஆம் கட்டமாக பணி நியமனம் செய்யும் பணியும் நடைபெற்றது.

இந்தப் பணியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.