தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 1:37 am IST

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் கணினி மூலம், குலுக்கல் முறையில் தோ்வு செய்து ஒதுக்கிடும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கடந்த 23-ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு சட்டப்பரேவைத் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களில், 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 438 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,266 கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 வாக்களிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுவதால், கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கணினி மூலம் குலுக்கல் முறையில் 414 கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டு, வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காப்பறைக்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் காப்பறையில் வைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூடி சீலிடப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன்(தோ்தல்), சொா்ணராஜ் (பொது), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.