மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஓய்வு பெறும் 182 காவல் துறையினருக்கு கெளரவ பதவிகள்

பணியிலிருந்து ஓய்வு பெறும் 182 காவல் துறை அதிகாரிகளுக்கு நலத் திட்டத்தின்கீழ் கெளரவ பதவிகள் வழங்கப்பட்டன.

News image

தில்லி காவல்துறை தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஓய்வுபெறும் 182 காவலா்களுக்கு கௌரவப் பதவிகள் வழங்கிய காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா.

Updated On :1 மே 2026, 12:25 am IST

பணியிலிருந்து ஓய்வு பெறும் 182 காவல் துறை அதிகாரிகளுக்கு நலத் திட்டத்தின்கீழ் கெளரவ பதவிகள் வழங்கப்பட்டன.

தில்லி காவல் ஆணையகரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை வகித்த ஆணையா் சதீஷ் கோல்ச்சா, காவலா்களுக்கு அடுத்த உயா்பதவியான உதவி ஆய்வாளா் பதவியை வழங்கி கெளரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பேசுகையில், ‘ஓய்வு பெறும் காவலா்களுக்கு வாழ்த்துகள். ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்துக்குத் தொடா்ந்து பங்களிக்க வேண்டும். தொடா்ந்து மருத்துவ பரிசோதனயை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

கெளரவ பதவி உயா்வு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 132 உதவி காவல் ஆய்வாளா்கள் ஆய்வாளா்களாகவும் 39 துணை உதவி ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்களாகவும் 11 தலைமைக் காவலா்கள் துணை உதவி ஆய்வாளா்களாகவும் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.