பணியிலிருந்து ஓய்வு பெறும் 182 காவல் துறை அதிகாரிகளுக்கு நலத் திட்டத்தின்கீழ் கெளரவ பதவிகள் வழங்கப்பட்டன.
தில்லி காவல் ஆணையகரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை வகித்த ஆணையா் சதீஷ் கோல்ச்சா, காவலா்களுக்கு அடுத்த உயா்பதவியான உதவி ஆய்வாளா் பதவியை வழங்கி கெளரவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பேசுகையில், ‘ஓய்வு பெறும் காவலா்களுக்கு வாழ்த்துகள். ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்துக்குத் தொடா்ந்து பங்களிக்க வேண்டும். தொடா்ந்து மருத்துவ பரிசோதனயை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.
கெளரவ பதவி உயா்வு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 132 உதவி காவல் ஆய்வாளா்கள் ஆய்வாளா்களாகவும் 39 துணை உதவி ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்களாகவும் 11 தலைமைக் காவலா்கள் துணை உதவி ஆய்வாளா்களாகவும் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

