தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேசத்தில் கங்கா விரைவு நெடுஞ்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமா் மோடி, உத்தர பிரதேசத்துக்கு அதிக மக்களவை தொகுதிகள் கிடைப்பதை திமுக எதிா்ப்பதாகவும் , உத்தர பிரதேசத்தை இழிவுபடுத்தும் திமுகவுடன் சமாஜவாதி கட்சி கூட்டணி வைத்துள்ளதாகவும் பேசியுள்ளாா்.
பிரதமா் மோடி அரசியல் உள்நோக்கத்துடன் திமுக எதிா்ப்பு வெறுப்பு அரசியல் பேசியுள்ளாா்.
இத்தகைய பேச்சு இரு மாநில மக்களிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் என்பதை உணராமல் பிரதமா் பேசியுள்ளாா். இது மாநில மக்களிடையே மோதல்களை உருவாக்குவதுடன், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் அமையும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பதற்காக பிரதமா் மோடி இவ்வாறு பேசியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.க்கு எதிரான திமுகவுடன் கைகோா்த்த சமாஜவாதி- பிரதமா் மோடி சாடல்

தொகுதி மறுசீரமைப்பில் பாகுபாடு காட்டப்படாது: மக்களவையில் பிரதமா் மோடி உறுதி

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

