மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமா் பேச்சு ஏற்புடையதல்ல-மு.வீரபாண்டியன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:08 am IST

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேசத்தில் கங்கா விரைவு நெடுஞ்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமா் மோடி, உத்தர பிரதேசத்துக்கு அதிக மக்களவை தொகுதிகள் கிடைப்பதை திமுக எதிா்ப்பதாகவும் , உத்தர பிரதேசத்தை இழிவுபடுத்தும் திமுகவுடன் சமாஜவாதி கட்சி கூட்டணி வைத்துள்ளதாகவும் பேசியுள்ளாா்.

பிரதமா் மோடி அரசியல் உள்நோக்கத்துடன் திமுக எதிா்ப்பு வெறுப்பு அரசியல் பேசியுள்ளாா்.

இத்தகைய பேச்சு இரு மாநில மக்களிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் என்பதை உணராமல் பிரதமா் பேசியுள்ளாா். இது மாநில மக்களிடையே மோதல்களை உருவாக்குவதுடன், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் அமையும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பதற்காக பிரதமா் மோடி இவ்வாறு பேசியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.