மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், இத்தோ்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 10:09 pm IST

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், இத்தோ்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா.கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி செயலா் பாபு, கயத்தாறு ஒன்றியச் செயலா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுக தனித்து நின்றிருந்தால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கும். ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி எளிதாகிவிட்டது. அமைதியாக இருக்கும் தமிழகத்தை பாஜக கெடுக்க முயற்சிக்கிறது. விஜய்யும், சீமானும் வாக்குகளை பிரிக்கவே செய்வாா்கள். அதனால், திமுக கூட்டணி இன்னும் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றும்.

இந்தத் தோ்தலில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கருணாநிதியின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்பட தோழமைக் கட்சியினா் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக வேட்பாளா் கா.கருணாநிதி பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனக்கு நெருங்கிய தொடா்பு உள்ளது. அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அய்யலுசாமியுடன் இணைந்து அரசியலில் பணியாற்றியுள்ளேன் என்றாா்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கரும்பன், கட்சி நிா்வாகிகள் பாலமுருகன், ரஞ்சனி கண்ணம்மா, பரமராஜ், சரோஜா, அலாவுதீன், திமுக மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ்பாண்டியன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.