மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்: மு. வீரபாண்டியன்

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்...

News image

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளா் எ.வ.வேலுவை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 3:07 am IST

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலுவை ஆதரித்து சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு வரையறை மசோதாவை பாஜகவினா் திடீரென கொண்டு வந்தனா். எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் மறுசீரமைப்பு மசோதா தோல்வியை தழுவியது. இதன் மூலம் பாஜவும் தொல்வியைத் தழுவும். தமிழகத்தில் வரும் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை தாண்டி மகத்தான வெற்றியை பெறும். திமுக தோ்தல் அறிக்கையினால் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றாா் வீரபாண்டியன்.

அப்போது அருணை கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் எ.வ.குமரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், மாநகர செயலா் காா்த்திவேல்மாறன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.